பிரான்ஸில் வாழ்ந்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பல்கலைக்கழக மாணவிகள் அடுத்தடுத்து திடீரென மரணமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று மக்களைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் இளையோரின் மரணங்கள் பெரும் இழப்புகளாக அமைந்துள்ளன.
கடந்த வாரம் மரணமடைந்த இந்த இரண்டு மாணவிகளும் பிரான்ஸ் நாட்டில் மருத்துவத்துறையில் கல்வி கற்றுவந்தவர்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த மாணவி 22வயதான கார்த்திகா குலேந்திரா கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் மந்துவில் வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த மாணவி 18 வயதான சினேகா சந்திரராசாகடந்த 13 ஆம் திகதி உயிரிழந்தார்.