பிரதமர் மோடியின் முக்கிய செய்தியொன்றை எடுத்துக் கொண்டு இந்தியாவின் முக்கிய பிரமுகர் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அந்த முக்கிய செய்தியுடன் வரவுள்ள உயர் அதிகாரியாவார்.
நாளையதினம் வெள்ளிக்கிழமை அவரின் கொழும்புக்கான விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு வரும் அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் முக்கிய சந்திப்பையும் நடத்தவுள்ளார்.
சீன, அமெரிக்க உயர்மட்டத் தூதுக்குழுக்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தையடுத்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொழும்பு வருவது முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.